Thursday, June 16, 2011

அருள்புரிவாள் அபிராமி

அருள்புரிவாள் அபிராமி

அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 

       அன்று தெய்வக்குழந்தைக்குப் பாலூட்டியே,
                        தமிழர்க்கு சிவகவியைத் தந்தாள் 'அம்மா'!
                        தஞ்சம் என்றே அண்டும் அடியார்க்கெல்லாம்
                        அஞ்சேல் என்றே அபயம் அளிப்பாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 


      அன்று படிப்பில்லா பாமர பக்தனுக்கு,
                      பார்போற்றும் புலமையைத் தந்தாள் 'அம்மா'!
                      புகல் வேண்டித் தனை நாடும் பக்தர்க்கெல்லாம்,
                      சுகமான  பதநிழலைத் தருவாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 

  
       அன்று ஊமைக்கு வாய் பேசும் வரமளித்தே,
                       தேமதுரத் துதி பாட வைத்தாள் 'அம்மா'!
                       'கதி நீயே ' எனக்கதறும் தீனர்க்கெல்லாம்,
                       இதமான பத நிழலை அருள்வாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 


                     

4 comments:

  1. Kannal na yenna artham amma?! the song is lovely.. :)

    ReplyDelete
  2. மிக அருமை, இனிமை, அம்மா!
    அம்மாவைப் பற்றி என்ன சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் தேன்தான்!

    ReplyDelete
  3. kannal==karumbu
    happy u njoyd d song sankar!


    kavinaya,
    thanks fr ur visit!amma s sweet;she makes any thing of hers sweet as she has done with kala's voice!!

    ReplyDelete
  4. I happened to play this in Abirami Sannathi in thirukadayur. Thanks.

    ReplyDelete